Simple Superstar Movie




தாயின் பெருமைகளை என் தாய் எனக்குச் சொல்ல, இங்கே அதை தொகுத்துள்ளேன்.

ஒரு சமன்பாட்டின் இரு பக்கங்கள் (Two sides of an equation). Poem war transcript from Blackriverpoets.com.
காமமில்லா காதல் அன்பானது
நோக்கமில்லா நட்பு வரமானது
தேடலில்லா பிறவி கடனானது!
பொய்யில்லா பெண்மை அழகானது
எதிபார்ப்பில்லா உறவு இன்பமானது
நோக்கமில்லா வாழ்க்கை வீணானது !
உயிரில்லா மெய் பிண்டமானது
மெய்யில்லா சேர்க்கை சாபமானது
உழைப்பில்லா உயர்வு தானமானது!
ஆக்கமில்லா கனவு சோர்வானது
கனவில்லா உள்ளம் வஞ்சகமானது
உணர்வில்லா உயிர் இழிவானது !
கருத்தில்லா வாக்கு குப்பையானது
மருந்தல்லா உணவு பிணியானது
விருந்தில்லா விழா விரயமானது!
பொருளில்லா வாதம் வினையானது
குணமில்லா மருந்து மண்ணானது
பயனில்லா சிகிச்சை சிக்கலானது !
சீற்றமில்லா சிந்தை சுகமானது
ஏற்றமில்லா செயல்கள் கனிவானது
மாற்றமில்லா மனம் மகிமையானது
ஏமாற்றமில்லா எண்ணம் உயர்வானது
போரில்லா உலகம் அமைதியானது
ஆசையில்லா உள்ளம் தூய்மையானது !
கல்வியில்லா இளமை சோகமானது
கேள்வியில்லா வாழ்க்கை கேலியானது
தோல்வியில்லா வெற்றி துன்பமானது

ஓரு அருமையான கவிதைப்போர், திரு பிரதிக் முரளி உடன். போர்க்களம் இங்கே.
வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
வாழ்வியல் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!
நிரந்தரம் இதுவென வசந்தத்தின் தேனீக்கள் போல்
பறந்து திரியும் இளமை, முதுமையை அறியாது போலும் !
செழுமைமிகு கனா, கனாவாக நிலைக்க மதி மயங்கிய மாந்தர்கள்,
“வழுவிலா” நண்பராயின் வாழ்வியலும் இனித்தருளுமோ ?
வழுக்கியவனும் உயர்ந்தெழுவான்
தளர்ந்தவனும் தழைத்தெழுவான்
தன்னலம் பேணா பெருமான், நின் நண்பன்,
தன் தோள்யீன்று துணையிருந்தால்.
வழக்கொழிவான் நாம் விழி முன்னே !
அழுக்குடம்பை காலனும் விடுவானோ ?
கண் முன்னே மறைவான் ! அய்யகோ !
இளமையின் இடிபாடுகளுக்கிடையில் முதுமை !
உதித்ததன் நோக்கமதை உளமாற உணர்ந்தபின்
காலனின் கடமையினூடே புகமாட்டார் புத்திமார்
காலத்தே களம்காணும் ஞாலத்தேடல், அது
கனிந்தபின் காலக்குடுவையினுள் நின்றுரைக்கமாட்டார்.
ஆசையிலே அவசரமாய் பிறந்த நம்மோர்
அவனியிலே அவதி உற்றழிவார் திண்ணம் !
ஆற்றினிலே கால் கழுவ போகும் மாந்தர்
சேற்றினிலே மறு காலை நிறுத்தி வைப்பார் !!
உற்றவேடம் உடுத்திய தோலாடை
ஏற்ற இச்சையினாலே திண்ணமானது
எஞ்சிய பாத்திரம் அதை களைந்தப்பின்
மிஞ்சுவது எடையில்லா இருப்பு மட்டுமன்றோ!
பொய் நின்ற ஞாலத்தே , பொல்லா ஒழுக்கொடு
வெறுப்போடு ஈகையை இச்சையுடன் காட்டாதே ,
வேடம் உற்ற இடத்தில் வேட்டையாடி ,
கர்மங்கள் சேர்ப்பாதே கருமமாய் திரிகின்றாரே !
ஈகையும் கர்மமேவென்று புறத்தே பொருளீட்டுவோர்
அகத்தே அறியப்படும் சோதிகண்டோர்க்கூற்று அறியாரோ?
பிரதிகர்மங்களினால் ஆட்கொண்ட சிறியார் தமக்கு
விகர்மமே சாலச்சிறந்த தர்மம்மென தெரியாரோ?
விதியில் சாக்கியர் சமணர் முண்டர் ஆரியர் சூரியர்
என விரியும் பாதியில் முளைத்த பற்பல சாதிகள் ,
தன்னெஞ்சு தன்னில் தொற்றினதே சொல்லுகையில்,
பத்மமெனத்திகழ் பரஞ்சோதியின் பைங்கழல் பிடிப்பதறியாரே !
அருளின் தழல்தனில் குறுகிக்கழல் பற்றினிற்றல்
சாத்திரம் படைத்தோர் மார்கத்தில் பக்தியாம்
பலனியற்றா கர்மம் விகர்மமேவென யோகமாம்
நன்நட்பியற்றல் நன்மகள் துணையிருத்தல் அதிலுச்சமாம்!
நன்நட்பென்பதன் நற்பொருள் யாதும் காசிநியோர் உணராரே !
உடலுக்கே கரைந்து நைந்து தமக்கென்று வாழ்ந்து வீழ்வார் !
அடிமைத்திறமதன் பொருள் அறிவார், ஆண்டனை அறியாதாரிவர்,
கண்ணன் தாம் மொழிந்தவற்றை நீர் கூறினால் ஏற்பரோ ?
ஏற்பதற்கோ எம்மான் மொழிந்த ஞாலம்
ஏற்றவன் ஏற்றதன் கூற்று அறியுமுன்னே
ஏற்றம் கொள்ளவா அவணியில் எழுந்தேன்
எந்தை எமக்குரைத்த எதிர்வினைநோக்கா பகர்வு


இந்த மௌனத்தை நான் அடைய,
எத்தனை வார்த்தைகள் கடந்துவந்தேன்…
மௌனத்தில் ஆரம்பித்து மௌனத்தில் முடித்தல் சிறப்பன்று. சத்தத்திற்கு பின் தான் மௌனம் என்பதை அழகாக சொல்கிறார்.
ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே
காதலன் காதலி உரசலில் தேகங்கள் தேய்ந்தாலும் தேடுதல் குறைவதில்லை என்பதை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்!
ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திறுகிட தகதிமிதா..
இதைவிட நெருக்கத்தில் இருக்கும் காதலர்களின் உணர்ச்சியை அழகுபடுத்தி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!
இதழிலே வெயில் மழை
உரியுதே உயிர் கிளை
இடையிலே புதுச் சுமை..
“இடையிலே புதுச் சுமை”, அட அருமை அருமை அருமை!
“I am not obligated” என்று விட்டேத்தியாக இருந்துவிடுவது எளிது, ஆனால் இந்த குணத்தால் நண்பர்களை இழக்க நேரிடலாம். இருப்பினும், பொறுப்புகளுக்கும்(responsibilities) வேண்டுகோள்களை ஏற்பதற்கும்(being obligated) வேறுபாடு உண்டு என்பதை உணர்ந்து நடந்தால், திறமையாக நிலைமையை சமாளிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.
பலன் கருதி பொருள் ஈட்டல்
நலம் பேணும் நன்முறையாம்
பொருள் சேர்க்கும் நன்மக்கள்
காலத்தே ஈட்டி பலம் கொள்வாரே!
நாயை கண்டாற் கல்லை காணோம், கல்லை கண்டாற் நாயை காணோம்
“அழகன்” படத்தில் வரும் “சங்கீத ஸ்வரங்கள்” அதனுடைய திரைக்கதை, படம் எடுத்த விதம், பாடல்வரிகள், இசை, திரை அமைப்பு மற்றும் தொலைக்காட்சி, சாலைகள், வெளிச்சம் போன்ற மெல்லிய நுணுக்கங்களுக்காக மிகவும் பிரபலமானது.
ஆனால் ஒரு அடிப்படை தவறு இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன். பாலசந்தர் படங்களில் தர்க்கம் தெளிவாக இருக்கும். இருந்தாலும் இரவு 9 மணியில் இருந்து பகல் 7 மணிவரை battery charge போடாமல் பேசக்கூடிய wireless handset அந்த படத்தின் காலத்தில் இருந்ததாக தெரிவில்லை!
கீழ்காணும் தலைப்பில் சில எண்ணங்களையும், உணர்வுகளையும், பதிவுசெய்ய வேண்டும். ஆனால் எப்போதி என்று அறியேன்.

Powered by ScribeFire.