கோபிநாத்திற்கு திருமண வாழ்த்து
நல்லோரே
நீவிர் நித்தம்
நன் நினைவுகளுடன்,
நற்செல்வமீட்டி,
நன் மக்களீன்று,
நற்றுணை நல்க.

நல்லோரே
நீவிர் நித்தம்
நன் நினைவுகளுடன்,
நற்செல்வமீட்டி,
நன் மக்களீன்று,
நற்றுணை நல்க.

தானுண்டு, தான் மட்டுமே உண்டு என நிலைகொண்டு ஆடும் மனமானது,
தன்னை தாண்டும் நிலைகண்டு தாளாமல் துடித்தெழுப்பும் ஓலமே வசவு;
ஆறக்கூடிய மனம் ஆரவாரமடையும் போது வசவு ஊறும், உருவெடுக்கும்,
ஊற்றெடுத்து உள்ளத்துள்ளே ஊடுருவி நாவின் நுனியின் ஜனிக்கும்,
தாளமில்லா தனித்துதியாகி காலமில்லா நானெனும் இருப்பைத் தூண்டும்,
ஆடிய ஆட்டம் அடங்கியபின் சுவடேதுமில்லாமல் மறைந்துபோகும், மறந்துபோகும்.
….

Powered by ScribeFire.
கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.
இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே..
தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
எங்கே ??
நோகாமல் நொந்து விழுந்தது;
தீண்டாமல் திண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
எங்கே ??
உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

Powered by ScribeFire.
நிறம் பல கொண்டாய்,
புறம் இழைய பொதிந்தாய்,
நிலம் பார்த் தசைந்தாய்,
புலம் போற்றி யீர்த்தாய்.திரை சீலை கொண்டாய்,
பட்டுடுத்தி நின்றாய்,
திரை விலகி திமிர,
பட்டாக படர்ந்தாய்.உள்ளங் கையில் தவழ்ந்தாய்,
உள்ளவன் கையில் தவித்தாய்,
உள்ளந் நெகிழ தளர்ந்தாய்,
உள்ளவன் மகிழ மலர்ந்தாய்.உச்சம் முரச நிமிர்ந்தாய்,
மிச்சம் முதலாய் சிலிர்த்தாய்,
முத்து உருண்டோட மிளிர்ந்தாய்,
சித்து சுதியேர மசிந்தாய்.உருவம் ஒன்றன்றி இருப்பாய்,
இலவம் பஞ்சினும் சிறப்பாய்,
உலகும் வியந்தபடி பிறப்பாய்,
இலகும் மதுரமேனி விருப்பாய்.

Powered by ScribeFire.
எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.
அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..

காலம் ஒரு மாயச் சக்கரம். அது சுழல சுழலத்தான் மாற்றங்கள் எற்படுகின்றன. மாற்றங்கள் அன்றி வேறேதும் மாறாதது அன்று. ஆனால், இந்த மாற்றங்களை உன்னால் வெல்லமுடியும், காலத்தை வெல்வதன் மூலம். காலத்திற்கும், மூச்சிற்கும் ஒரு அழுத்தமான் பந்தமுண்டு. ஒன்றன்றி மற்றொன்று அன்று. மூச்சிருக்கும் வரைதான் காலத்தின் கட்டாயம், மூச்சறுத்தால் காலமும் அறுக்கப்படும். மூச்சறுத்தல் இறப்பை குறிப்பதல்ல, சமாதி நிலையை குறிப்பதாகும். சகஜசமாதி என்றொரு நிலையுண்டு, அந்நிலையில் நிகழ்காலம் மட்டுமே இருக்கும், இறந்தகாலுமும், எதிர்காலமும் இராது. சகஜசமாதியில் மூச்சிருக்காது, ஆனால் சாதாரண மனிதர்களைபோல இருக்கமுடியும். மூச்சில்லாததால், எண்ணங்களும் இருக்காது, காலமும் நிகழ்ந்துகொண்டு மட்டுமே இருக்கும். இந்நிலையை எளிதில் தற்காலிகமாக எவராலும் அடைய முடியும். நிரந்தரமாக இந்நிலையை அடைய பயிற்சியும், முதிர்ச்சியும் வேண்டும்.
வழி என்னவென்றால்; ஒரு அமைதியான இடத்தில் ஒரு சௌகரியமான அமர்ந்தோ இல்லை படுத்துக்கொண்டு இல்லை சாய்ந்துகொண்டோ இருக்கவேண்டியது. பிறகு, உன் மூச்சை கவனிக்க தொடங்கவேண்டும். கவனிப்பது என்றால், அந்த மூச்சு காற்று நாசியிலிருந்து வயரு வரை உள்ளே போவதையும், பிறகு வெளியே வருவதையும் கவனிக்கவேண்டும். இப்படி கவனிக்க தொடங்கியது, உன் மூச்சு நிதானமாவதை உணரமுடியும். மேலும் பயிற்சி மேற்கொள்ள, மூச்சினூடே இதயத்தில் ஒலி பேரொலியாக கேட்கமுடியும். அதாவது, இதயத்துடிப்பு நன்றாக உரக்கக்கேட்கும். மேலும் கவனிக்க, உன் மூச்சு காற்றின் ஓட்டம் குறையதொடங்கும். நல்ல ஒரு ஆனந்த நிலையை அடையும்போது, உன் மூச்சு மிக மிக குறைந்திருப்பதை கண்டு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆனந்த நிலைதான் சகஜசமாதி. ஒரு தேர்ந்த ஞானியாகியவன், எப்போதுமே இந்த ஆனந்த நிலையில் நிறைந்திருப்பான். பயிற்சி மேலும் செய்ய, இந்த ஆனந்த நிலையில் நீளம் கூடும்.
Powered by ScribeFire.

கால்கள் மரத்துப் போனால்,
எச்சில் தொட்டு கால் கட்டை விரலில் தடவ,
கால்கள் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பும்.

ரோமம் நிறைந்தவன் உணர்ச்சிவயப்படுவான்,
ரோமம் அற்றவன் அதீத சுயநலவாதியாவான்,
வலது தோளில் மச்சமுள்ளவன் அதிட்டசாலி,
இடது தோளில் மச்சமுள்ளவன் போராளி,
லிங்கத்தில் மச்சமுள்ளவன் போகி,
கர்மத்தின் இச்சையுள்ளவன் யோகி,
பின்னலுள்ள உள்ளங்கையுடையான் குழப்பமடைவான்,
பின்னலில் உள்ளம் தொலைத்தவன் இன்னலடைவான்,
இல்வாழ்வு துறந்து ஞானத்தேடல் கடிது,
இல்வாழ்வு இருந்து ஞானத்தேடல் எளிது,
மனையாள் மனைவியாயிருத்தல் லவ்கீகம்,
மனையாள் துணைவியாயிருத்தல் ஆன்மீகம்,
தந்தையின் கர்மம் தமையனைச் சேரும்,
தமையன் முக்தம் வரை தந்தைக்கு முற்று அன்று,
சந்தானபேறு ஒரு கடமையே ஆகும்.
