


காஞ்சிபுரத்திலுருந்து சுமார் 7 கிமி வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலப்புறம் திரும்பி சுமார் 7 கிமி நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குருக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலப்புறம் திரும்பி சுமார் 2 கிமி சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும், சற்றே கடந்துச்செல்ல ஆலயம் வரும். இவ்வாலயத்தில் இரண்டு மூலவர் லிங்கம் உண்டு ஒன்று அகத்திய முன் ஸ்தாபித்தது, மற்றொன்று அகத்தியரின் சீடர் புலத்தியர் ஸ்தாபித்த்து. வரலாறு அறிய http://www.shivatemples.com/tnaadut/tnt09.html சுட்டவும்.
இந்த ஆலயத்தில் ஒரு விந்தையுள்ளது. வெளி அடுக்கிலுள்ள ஒரு தூணில் ராமன் அம்பு எய்ய ஆயத்திருப்பதுபோல் ஒரு சிற்பம் உள்ளது. உள்ளிலுள்ள அடுக்கிலுள்ள ஒரு தூணின் வாலி-சுக்ரீவன் சண்டையிடுவதுபோல் ஒரு சிற்பம் உள்ளது. ராமனிடமிருந்து பார்த்தால், வாலி-சுக்ரீவன் தெளிவாகத்தெரியும். வாலி-சுக்ரீவன் இடத்திலிருந்து பார்த்தால் ராமன் மொத்தமாகத் தெரியவில்லை. என்ன அருமையாக கட்டிடகலையில் அசத்தியிருக்கிறார்கள்!!
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 9 கிமி தொலைவில் இருக்கும் தூசி கிராமத்தில் பிரிந்து சுமார் 2 கிமி கடந்து செல்ல திருகுரங்கணில் முட்டம் கிராமம் வருகிறது. இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. இங்கு குரங்காக மாறிய வாலிக்கும், அணிலாக மாறிய இந்திரனுக்கும், காகமாக மாறிய எமனுக்கும் ஈசன் சாபவிமோசம் அளித்துள்ளார் என்பது ஐதீகம். கோயிலின் வாயிலில் குரங்கு, அணில், காகம் இறைவனை பூசிப்பதை காணலாம். http://www.shivatemples.com/tnaadut/tnt06.html
காஞ்சிபுரத்திலிருந்து Collector அலுவலகம் வழியே செல்லவேண்டும். வந்தவாசி சாலை குறுகியது. சுமார் 4 கிமி சென்ற பிறகு பாலாற்றின் மீதமைந்துள்ள பாலத்தை கடக்கவேண்டும். சிறிது தூரம் சென்றபின் ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதைகடந்து செல்ல தூசி கிராமம் வரும். ஆங்கு இடதுபுரம் திரும்பி சுமார் 1 கிமி செல்ல தூசி கிராமம் எல்லை வரும். அதிலிருந்து சுமார் 1.5 கிமி கடக்க குரங்கணில் முட்டம் வரும்.
ஆலயத்தின் குருக்கள், திரு KM Sridhar (9600787419, 9629050143, 044-27242409) மிக அருகே இருக்கிறார்.
“சிவன் சொத்து குல நாசம்” என்று ஒரு பழமொழியுண்டு. இதற்கு கற்பிக்கப்படும் பொருள் என்னவென்றால், சிவாலயத்தின் சொத்துக்களின் மேல் ஆசைப்படுவது தண்டிக்கப்படும் குற்றம். என் தந்தையும், குருவும் எனக்கு கற்றுக்கொடுக்கும் போது, சிவாலயத்திலிருந்து விபூதி தவிர வேறெதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றனர்.
நன்று ஆராய்ந்து பார்த்தால், இந்த பழமொழியுன் பொருள் இன்னும் ஆழமானது என்பது புரியும். நான் கடைசியாக யாருக்கோ இதைபற்றி சொல்லும்போதுதான் எனக்கு இந்த ஆழ்கருத்து புலப்பட்டது.
அதாவது, சிவன் சொத்து என்பது ஆலயத்தை மட்டும் குறிக்காது. அது இவ்வுலகத்தையே குறிக்கும். இவ்வுலக வாசனைகளால், ஆனந்தம் எப்போது அகப்படாது என்பதே ஆழ்கருத்தாகும். உலக வாசனைகளை துறப்பது எளிதன்று, ஆனாலும் முடியாததும் அன்று. ஆசைகளை மறுக்கக்கூடாது, ஆசைகளை அவை உதிக்கும் இடத்திலேயே வேறருக்கவேண்டும். அதற்கு முதற்படி, “என்னிடம் எல்லாம் உள்ளது என்று நம்பத்தொடங்குங்கள்”. எல்லாமே, என்னிடம் இருக்கும்போது எனக்கு ஆசைகள் கிடையாதல்லவா? அடுத்தப்படியாக, “நானே எல்லாம், எல்லாவுமே நான் தான்” என்று உணருங்கள். அமைதி பிறக்கும், ஆனந்தம் நிலைக்கும்.
திருவிற்கோலம் (தற்போது கூவம்) கிராமத்திலுள்ள திரிபுராந்தக சுவாமி அல்லது தீண்டாத் திருமேனி நாதர் பெருமானை காண நேற்று எனது thunderbirdல் சென்றேன். http://www.shivatemples.com/tnaadut/tnt14.html

இந்த ஆலயத்தில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த ஆலயம், கூவம் நதியில் மூலத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் குளம் அக்னி தீர்த்தமாகும்; இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த குளத்தில் ஒரு தவளை கூட கிடையாது. ஆலயத்தில் மூலவரான சிவலிங்கம் தீண்டப்படாதது; ஏனெனில் இது நிறம் மாறக்கூடியது. வெள்ளை நிறமாக மாறும் போது மழைவருமாம், மற்றும் நினைத்த காரியம் நிறைவேறுமாம். இவ்வாலயம் தெற்கு பார்த்த கோபுரத்தை கொண்டது. ராஜ கோபுரம் தற்போது கட்டப்பட்டது தான். ஆலயத்தை நிர்வகிப்பது திரு ராஜேந்தின் (9381846515).
இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).

திருகண்டலம் திருக்கோயில்

திருகண்டலம் செல்லும் சாலை..
Powered by ScribeFire.