இச்சையின்றி இம்மியும் நகராது,
பிச்சையின்றி கலையும் சேராது,
காயமின்றி எண்ணங்கள் வாராது,
சாயமின்றி வண்ணங்கள் சேராது,
ஸ்தூலமின்றி இவ்வுலகம் இராது,
ஞாலமின்றி அவ்வுலகம் இராது.
- ஒரு தூசி கூட நகரவேண்டும் என்றால், உந்துதல் தேவைபடுகிறது; ஆசையில்லாமல் உந்துதல் இல்லை.
- ஒரு கலையை கற்றுணரவேண்டுமேனில், அதை தகுந்த ஆசானிடத்தில் வேண்டித்தான் பெறவேண்டியிருக்கிறது.
- உடலில் ஒட்டிகொண்டிருக்கும்வரை தான் எண்ணங்களும் ஒருவனிடம் இருக்கும், உடலை பிரிந்ததும் எண்ணங்கள் மறைந்துவிடும்.
- அருளாகிய வண்ணம் ஒருவனிடம் சேரவேண்டுமெனில், குருவாகிய சாயம் அவசியம் (குருவே அருளும் ஆவார்).
- பௌதிக உடலுள்ளவரை தான் இந்த உலகத்தில் இருக்கமுடியும், சூட்சம உடலிலும் இருக்கமுடியும்.
- ஞானமடைந்த (உணர்ந்த) பின் மட்டுமே, ஆனந்திருக்க முடியும்.
பிண்டமின்றி ஜீவன்கள் கிடையாது,
அண்டமின்றி சிவனே கிடையாது,
ஒலியின்றி கேள்வி கிடையாது,
வலியின்றி வேள்வி கிடையாது,
கருவியின்றி கர்மம் கிடையாது,
அருவியின்றி தர்மம் கிடையாது.
- எல்லா ஜீவராசிகளும் இவ்வுலகில் தோன்ற எடுக்கும் (கருப்பையில்) முதல் உருவமே பிண்டம் ஆகும்.
- அண்டம் மட்டுமே இயல்பு நிலையிலே இருக்கிறது, இயல்பு நிலையின் இன்னொரு நாமமே சிவன் என்பதாகும்.
- ஒலியில்லாமல், கேள்விகளும் அன்று, பதில்கலும் அன்று, கேள்வி ஞானமும் அன்று.
- முயற்சிகள் தோற்பதும், பின் மேம்படுவதும், வலிகளும், வெற்றிகளுமின்றி வேட்கையுமில்லை, வேள்வியுமில்லை.
- ஒரு செயலாகிய கர்மம் நடக்க, கருவியாகிய கர்த்தா தேவை.
- அருவிபோல மேலிருந்து கீழே தரப்படுவதுதான் தர்மம் (தானம்) ஆகும்.
ஏணியின்றி உயர்வு இல்லை,
கேணியின்றி பகிர்வு இல்லை,
கோபமின்றி சாபம் இல்லை,
லோபமின்றி லாபம் இல்லை,
காமமின்றி காதல் இல்லை,
சாமமின்றி பாடல் இல்லை.
- ஏணியாக அருளும், படிகளாக உதவியும் இல்லையெனில் முன்னேற்றம் கிடைக்காது.
- எடுக்க எடுக்க கொடுக்கும் கேணிதான் மனிதன் தோற்றுவித்த முதன்மையான பகிர்வு முறை.
- குரோதம் இல்லாமல் வன்சொல்லாகிய சாபமில்லை.
- சுயநலமாகிய லோபமில்லையெனில் லாபம் பார்ப்பது கடினமே. வாழ்வியலில், எல்லாருக்குமே நல்லவராக இருக்க முடியாது.
- காமம் இல்லாத காதல், காதல் அன்று. வெறும் அன்பே ஆகும்.
- சாம வேதமில்லாமல் பக்தி மார்கமில்லை. சாமம், தியான-வழிபாடு-பக்தி-ஆராதனை வழிமுறைகளை தொகுக்கிறது.
இவ்வுலக வாழ்வில், எல்லாவுமே ஒன்றோடு ஒன்று சார்ந்தே இருக்கக்கடவது.
இதை புரிந்து அனுசரித்து நடக்க, வாழ்க்கையில் இன்பம் மட்டுமே மிஞ்சும்.
Powered by ScribeFire.
தனிமையே திவ்ய தவமென
திறிந்து கொண்டிருந்தேன் நேற்று
இனிமையே நாம் கொண்ட நட்பென
Instantட்டாய் புரியவைத்தாய் இன்று
நாளை என்ற கேள்வியே நமக்கு
Nonsensical தனமாக இருக்கு
இப்போது என் செய்வோம் எனக்கண்டு
வெல்ல வேண்டும் திறம்பட புரிதல் கொண்டு
பலமாக பாலமாக இருப்பது நம் நட்பு
நண்பர்கள் அன்றி இருத்தல் மிக தப்பு
எனக்கு நண்பனாக நீயும்
உனக்கு தோழனாக நானும்
சேர்ந்தே சாதிப்போம் ஒன்றுபட்டு
நம் நட்புக்கு இருக்குமொரு கல்வெட்டு.
மரணம் ஆனந்தம்;
மரணம் ஸ்தூல உடலுக்குத்தான்,
மரணம் ஆன்மாவிற்கில்லை;
நான் ஆன்மா;
நான் அருவம்;
நானே எங்கும் நிறைந்திருக்கிறேன்;
நானே எல்லாவும்;
எல்லாவும் நானே!
எனக்கு ஒரு தோழியுண்டு,
அவளுக்கு என் மீது மிகுந்த அன்புண்டு;
அவளை எனக்கு மிகப்பிடிக்கும்,
அவளுக்கும் என்னை மிகப்பிடிக்கும்;
என் சொல்லை அவள் தட்டமாட்டாள்,
அவளுக்காக நான் எதுவும் செய்வேன்;
குறுதிப்பற்றல்ல,
ஸ்தூலபற்றுமல்ல,
உயிர்பற்றுமல்ல,
ஏதோ ஒரு ஏக யுணர்வு;
அவளை பார்க்க தேவையில்லை,
அவளுடன் பேசத்தேவையில்லை,
அவளருகிலும் வேண்டியதில்லை,
ஆனாலும் அவளை யுணர முடிகிறது;
என் எண்ணங்கள்,
அவளை காத்து நிற்கும்,
அவளை வழி நடத்தும்,
அவளுக்கு பூரணத்துவ மளிக்கும்,
அவளை ஞானியாக்கும்;
அவள் என்னுடைய தோழி,
என்னுடைய ஒரே அன்புத்தோழி!
சிவாய வசி எண்ணவும் செபிக்க, இச்சகம் எலாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, யாவும் சித்தியாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, வானம் ஆளளாம்;
சிவாய வசி என்பதே, இருதலை தீ யாகுமே!
Powered by ScribeFire.
உனக்கு தோள்கொடுக்க தோழன் இருக்கிறேன்,
எதற்கும் கலங்காதே,
யாருக்கும் மயங்காதே,
நீ சாதிக்கப்பிறந்தவன்,
தளராதே,
துவளாதே
சோர்வு நம் எதிரி,
விழித்தெழு,
வல்லமையோடிரு,
புன்னகை பூத்திரு,
காலத்திற்கு காத்திரு,
அகத்தே உறுதிபூண்டிரு,
அளவான அகந்தையோடிரு,
அளவற்ற அன்போடிரு,
உன்னால் ஏதும் முடியும்,
நீ வெல்வாய்;
Powered by ScribeFire.
மனம், வாக்கு, காயம்;
சிந்தினை, சொல், செயல்;
நான், எனது;
இவையனைத்தும் உன் திருப்பாதங்களில் சமர்பணம்.
Powered by ScribeFire.
அன்பே மையமாய்
ஆசியே உயிராய்
இன்பமே குறிக்கோளாய்
ஈசனின் தலைமகனே முதலாய்
உயர்வே எண்ணமாய்
ஊக்கமே மொழியாய்
எழுச்சியே மூச்சாய்
ஏகாந்தமே நிலையாய்
ஐம்பூதங்களே துணையாய்
ஒழுக்கமே நெறியாய்
ஓங்காரமே ஆதாரமாய்
எங்கள் இல்லறம் தொடங்குகிறோம்.
இயற்கையின் இனிமைபோல, மழையின் குளுமைபோல
வள்ளுவனின் குறளைப்போல, எங்களை வாழ்த்த தங்களை எங்கள்
திருமண வரவேற்பு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம்.
பார்வை ஒன்றாகியிருந்தும் நல்லது-கெட்டது இரண்டாகின;
ஆதவன் ஒன்றாகியிருந்தும், பகல்-இரவு இரண்டாகின;
நான் என்ற இருப்பு ஒன்றாகியிருந்தும், ஊண் – உயிர் இரண்டாகின;
எண்ணங்கள் ஓரிடத்திலிருந்து உதித்தும், ஆனந்தம்-பயம் இரண்டாகின;
நாவொன்றாகவிருந்தும், இன்மை-வன்மை இரண்டாகின;
இறையவன் ஒருவனாகியிருந்தும், தாய்-தந்தை இரண்டாகின;
இவையனைத்தும் இரண்டாகிபோனதாலே,
நாம் ஒன்றாகியிருந்தும், நீ-நான் இரண்டாகிபோனோம்!
எண்ணங்கள் இல்லாமல் இருக்கத்தான் முடியுமா?
எண்ணங்களை அடக்கத்தான் வேண்டுமா?
அடக்கவும், அடங்கி ஒடுங்கவும் எண்ணங்கள் புரவியா என்ன?
அடக்கிவிட்டால், சில காலம் கழிந்து பொங்கிவிடாதா என்ன?
எண்ணங்களை என்ன தான் செய்வது?
எண்ணங்களின் ஆதியை காண முடியுமா?
எண்ணங்களின் ஆதியை கவனிக்க ஓட்டம் குறையுமோ?
எண்ணங்களை எண்ணுவது யாராக இருக்கமுடியும்?
எண்ணங்களின் எதை அச்சாணியாக கொண்டுள்ளது?
அவ்வச்சாணியை அசைத்து பார்க்க முடியுமா?
ஓம் என்ற பிரணவத்துக்கும் அவ்வச்சாணிக்கும் தொடர்பேதுமிருக்குமோ?
நான் என்ற உணர்வும் ஓம் என்ற பிரணவமும் ஒன்றோ?
நான் என்ற உணர்வு அடங்க எண்ணங்கள் மறையுமோ?
எண்ணங்கள் மறைய ஆனந்தம் பொங்கிவிடாதோ?
ஆனந்த நிலையில் ஊண் எதற்கு?
ஆன்ம உணர்வில் நிலைத்து நிற்க,
ஆனந்த பரவசம் பொங்கிட,
கவனத்தை உள்முகம் திருப்புவீர்,
உள்ளுக்குள் கடந்து செல்வீர்,
கடவுளாவீர்!
Powered by ScribeFire.