Archive

Posts Tagged ‘poems’

வசவு

April 4th, 2010 No comments

தானுண்டு, தான் மட்டுமே உண்டு என நிலைகொண்டு ஆடும் மனமானது,
தன்னை தாண்டும் நிலைகண்டு தாளாமல் துடித்தெழுப்பும் ஓலமே வசவு;
ஆறக்கூடிய மனம் ஆரவாரமடையும் போது வசவு ஊறும், உருவெடுக்கும்,
ஊற்றெடுத்து உள்ளத்துள்ளே ஊடுருவி நாவின் நுனியின் ஜனிக்கும்,
தாளமில்லா தனித்துதியாகி காலமில்லா நானெனும் இருப்பைத் தூண்டும்,
ஆடிய ஆட்டம் அடங்கியபின் சுவடேதுமில்லாமல் மறைந்துபோகும், மறந்துபோகும்.
….

Powered by ScribeFire.

வர்ணனை

October 28th, 2009 No comments

நிறம் பல கொண்டாய்,
புறம் இழைய பொதிந்தாய்,
நிலம் பார்த் தசைந்தாய்,
புலம் போற்றி யீர்த்தாய்.

திரை சீலை கொண்டாய்,
பட்டுடுத்தி நின்றாய்,
திரை விலகி திமிர,
பட்டாக படர்ந்தாய்.

உள்ளங் கையில் தவழ்ந்தாய்,
உள்ளவன் கையில் தவித்தாய்,
உள்ளந் நெகிழ தளர்ந்தாய்,
உள்ளவன் மகிழ மலர்ந்தாய்.

உச்சம் முரச நிமிர்ந்தாய்,
மிச்சம் முதலாய் சிலிர்த்தாய்,
முத்து உருண்டோட மிளிர்ந்தாய்,
சித்து சுதியேர மசிந்தாய்.

உருவம் ஒன்றன்றி இருப்பாய்,
இலவம் பஞ்சினும் சிறப்பாய்,
உலகும் வியந்தபடி பிறப்பாய்,
இலகும் மதுரமேனி விருப்பாய்.

Powered by ScribeFire.

Tags: , ,

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

ஒரு கோரிக்கை

October 19th, 2009 No comments

அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,

இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..

தும்மல்

September 25th, 2009 No comments

தும்மல் விலக்க,
நாசி துவாரத்தின் மத்தியில்,
நாசியின் நடுதண்டின் அடியில்,
ஆள்காட்டி விரலால் அழுத்த,
தும்மல் அடங்கும்.

Tags: , ,

ஆடவர்..

September 25th, 2009 No comments

ரோமம் நிறைந்தவன் உணர்ச்சிவயப்படுவான்,
ரோமம் அற்றவன் அதீத சுயநலவாதியாவான்,
வலது தோளில் மச்சமுள்ளவன் அதிட்டசாலி,
இடது தோளில் மச்சமுள்ளவன் போராளி,
லிங்கத்தில் மச்சமுள்ளவன் போகி,
கர்மத்தின் இச்சையுள்ளவன் யோகி,
பின்னலுள்ள உள்ளங்கையுடையான் குழப்பமடைவான்,
பின்னலில் உள்ளம் தொலைத்தவன் இன்னலடைவான்,
இல்வாழ்வு துறந்து ஞானத்தேடல் கடிது,
இல்வாழ்வு இருந்து ஞானத்தேடல் எளிது,
மனையாள் மனைவியாயிருத்தல் லவ்கீகம்,
மனையாள் துணைவியாயிருத்தல் ஆன்மீகம்,
தந்தையின் கர்மம் தமையனைச் சேரும்,
தமையன் முக்தம் வரை தந்தைக்கு முற்று அன்று,
சந்தானபேறு ஒரு கடமையே ஆகும்.

Tags: , ,

நம்பாதே..

September 25th, 2009 No comments

மார்பு மயிரற்ற ஆணையும்,
மார்பு சிறுத்த பெண்னையும்,
கண்மூடி நம்பாதே.

கழுத்து நீண்ட,
கண் சிவந்த,
சொல் திக்கிய,
உடல் குறுத்த,
உதடு தடித்த,
ஆட்டு தாடியுடைய,
ஆடவரை 
கண்மூடி நம்பாதே.

ஈர்ப்பு

September 22nd, 2009 No comments

ஈர்ப்பே ஈசனின் ஈசத்வமாகும்,
ஈர்ப்பே வினையின் முதலாகும்,
ஈர்ப்பே ஓட்டத்தின் கர்த்தாவாகும்,
ஈர்ப்பே சுழற்சியின் வித்தாகும்,
ஈர்ப்பே பிறப்பின் மூலமாகும்,
ஈர்ப்பே ஓங்காரத்தின் பலனாகும்,
ஈர்ப்பே உறவுவின் உரமாகும்,
ஈர்ப்பே உயர்வின் ஏணியாகும்,
ஈர்ப்பே வழிபாட்டின் எதிர்பயனாகும்,

….

அழகு

September 20th, 2009 No comments

அழகு ஒரு உணர்வே அன்றி பொருள்ளல்ல,
அழகு காலத்தின் அடிமையே அன்றி வேறல்ல,
அழகு கண்ணோட்டத்தில் மட்டுமே நில்லே,
அழகு கண்கெட்டோர்க்கு வெறும் சொல்லே,
அழகு செழுமையிலும் உண்டு,
அழகு வெறுமையிலும் உண்டு,
அழகு காரணியான உறவு நிலைக்காது,
அழகு பூரணியான தாய்மை பொய்க்காது,
அழகு ஆடவரின் ஆற்றலை அளக்கும்,
அழகு பெண்டிரின் பொருமையை அளக்கும்,
அழகு அருணையின் ஒளிகீற்று,
அழகு பொருணையின் நீறூற்று,
அழகு அகத்தின்பால் இருக்க ஈர்க்கும்,
அழகு புறத்தின்பால் இருக்க நீர்க்கும்,
அழகு ஈர்ப்பின் மற்றொரு முகவரி,
அழகு எல்லா வினையின் மூலவரி,
அழகு (வடிவத்தின்) ஆசை இரட்டைகிளவி,
அழகு (வடிவத்தின்) ஆணவம் இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அன்பு இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அருள் இரட்டைகிளவி,
அழகு புகழ் போதை தரக்கூடியன,
அழகு பற்று துயரை தரக்கூடியன,
அழகு துணிவு வெற்றியை தரக்கூடியன,
அழகு ஆற்றல் உயர்வை தரக்கூடியன்.

அகத்தின் அழகை நல்ல எண்ணங்களைக் கொண்டு மெருகேற்றுவீர்.
புறத்தின் அழகை நல்ல செயல்களை செய்து மேம்படுத்துவீர்.
அழகினால் தோன்றும் போதையை வெற்றி கொள்வீர்,
அழகைக்கொண்டு துணிவும் மற்றும் ஆற்றலில் உதவியோடு வாழ்வில் உயர்வீர்.

Powered by ScribeFire.

பிணைப்பு

September 13th, 2009 No comments

இச்சையின்றி இம்மியும் நகராது,
பிச்சையின்றி கலையும் சேராது,
காயமின்றி எண்ணங்கள் வாராது,
சாயமின்றி வண்ணங்கள் சேராது,
ஸ்தூலமின்றி இவ்வுலகம் இராது,
ஞாலமின்றி அவ்வுலகம் இராது.

  • ஒரு தூசி கூட நகரவேண்டும் என்றால், உந்துதல் தேவைபடுகிறது; ஆசையில்லாமல் உந்துதல் இல்லை.
  • ஒரு கலையை கற்றுணரவேண்டுமேனில், அதை தகுந்த ஆசானிடத்தில் வேண்டித்தான் பெறவேண்டியிருக்கிறது.
  • உடலில் ஒட்டிகொண்டிருக்கும்வரை தான் எண்ணங்களும் ஒருவனிடம் இருக்கும், உடலை பிரிந்ததும் எண்ணங்கள் மறைந்துவிடும்.
  • அருளாகிய வண்ணம் ஒருவனிடம் சேரவேண்டுமெனில், குருவாகிய சாயம் அவசியம் (குருவே அருளும் ஆவார்).
  • பௌதிக உடலுள்ளவரை தான் இந்த உலகத்தில் இருக்கமுடியும், சூட்சம உடலிலும் இருக்கமுடியும்.
  • ஞானமடைந்த (உணர்ந்த) பின் மட்டுமே, ஆனந்திருக்க முடியும்.

பிண்டமின்றி ஜீவன்கள் கிடையாது,
அண்டமின்றி சிவனே கிடையாது,
ஒலியின்றி கேள்வி கிடையாது,
வலியின்றி வேள்வி கிடையாது,
கருவியின்றி கர்மம் கிடையாது,
அருவியின்றி தர்மம் கிடையாது.

  • எல்லா ஜீவராசிகளும் இவ்வுலகில் தோன்ற எடுக்கும் (கருப்பையில்) முதல் உருவமே பிண்டம் ஆகும்.
  • அண்டம் மட்டுமே இயல்பு நிலையிலே இருக்கிறது, இயல்பு நிலையின் இன்னொரு நாமமே சிவன் என்பதாகும்.
  • ஒலியில்லாமல், கேள்விகளும் அன்று, பதில்கலும் அன்று, கேள்வி ஞானமும் அன்று.
  • முயற்சிகள் தோற்பதும், பின் மேம்படுவதும், வலிகளும், வெற்றிகளுமின்றி வேட்கையுமில்லை, வேள்வியுமில்லை.
  • ஒரு செயலாகிய கர்மம் நடக்க, கருவியாகிய கர்த்தா தேவை.
  • அருவிபோல மேலிருந்து கீழே தரப்படுவதுதான் தர்மம் (தானம்) ஆகும்.

ஏணியின்றி உயர்வு இல்லை,
கேணியின்றி பகிர்வு இல்லை,
கோபமின்றி சாபம் இல்லை,
லோபமின்றி லாபம் இல்லை,
காமமின்றி காதல் இல்லை,
சாமமின்றி பாடல் இல்லை.

  • ஏணியாக அருளும், படிகளாக உதவியும் இல்லையெனில் முன்னேற்றம் கிடைக்காது.
  • எடுக்க எடுக்க கொடுக்கும் கேணிதான் மனிதன் தோற்றுவித்த முதன்மையான பகிர்வு முறை.
  • குரோதம் இல்லாமல் வன்சொல்லாகிய சாபமில்லை.
  • சுயநலமாகிய லோபமில்லையெனில் லாபம் பார்ப்பது கடினமே. வாழ்வியலில், எல்லாருக்குமே நல்லவராக இருக்க முடியாது.
  • காமம் இல்லாத காதல், காதல் அன்று. வெறும் அன்பே ஆகும்.
  • சாம வேதமில்லாமல் பக்தி மார்கமில்லை. சாமம், தியான-வழிபாடு-பக்தி-ஆராதனை வழிமுறைகளை தொகுக்கிறது.

இவ்வுலக வாழ்வில், எல்லாவுமே ஒன்றோடு ஒன்று சார்ந்தே இருக்கக்கடவது.
இதை புரிந்து அனுசரித்து நடக்க, வாழ்க்கையில் இன்பம் மட்டுமே மிஞ்சும்.

Powered by ScribeFire.