Archive

Posts Tagged ‘Philosophy’

Mother

July 31st, 2011 No comments

தாயின் பெருமைகளை என் தாய் எனக்குச் சொல்ல, இங்கே அதை தொகுத்துள்ளேன்.

  1. தாயில் சிறந்த கோவிலும் இல்லை
  2. தாயின் மடி மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம்
  3. குழந்தையின் எதிர்காலம் தாயின் கையில்தான் உள்ளது
  4. எல்லோரது இடத்தையும் தாய் வகிக்க முடியும், ஆனால் தாயின் இடத்தை வகிக்க வேறு எவராலும் முடியாது
  5. 1 கோடி போதனையை விட ஒருதுளி தாய்மை மேலானது
  6. மண்ணில் நல்லவனாக வாழவைப்பதும், நானிலத்தில் புகழ் பெற செய்வதும் தாய்தான்
  7. தாயை எதனோடும் ஒப்பிடுதல் கூடாது. ஏனெனில் அவள் ஈடுஇணை அற்றவள்
  8. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை ஒரு தட்டிலும் வைத்து தராசில் நிறுத்தால் உலகின் தட்டுதான் மேலே இருக்கும்
  9. தாயின் இதயம்தான் குழந்தைகளின் பள்ளிக்கூடம்
  10. நல்ல தாயை அடைந்தவன் தான் சாதனைகளைப் படைத்து பெரிய மனிதனாக உருவெடுக்கிறான்
  11. தாயின் உள்ளத்தை அறிந்தவன் கடவுளின் கருணையை அறிந்தவன்
  12. வாஞ்சையுள்ள இதயதைப் பெற்றவளே தாயாவாள்
  13. தாயை வணங்குபவனுக்கு தெய்வம் வழிகாட்டும்
  14. தாய் எங்கிருக்கிறாளோ அந்த இடம் சொர்கம்
  15. தாயின் கண்ணீரை துடைப்பவனே சிறந்த மகன்
  16. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவாதவன்
  17. அன்னையின் அன்பிற்கு அளவில்லை
  18. தாயை பிரிந்த மகன் வெறும் கூடுதான்

Know to Say No

June 1st, 2011 No comments
மனிதன் தன்னுடைய கர்மத்தினால் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய துயரத்தைவிட பிரதிகர்மத்தினாலேயே அதிக துயரை சம்பாதிக்கிறான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “You should know to say no”. அதாவது, இயலாது என்று சொல்லவேண்டிய இடத்தில் இயலாது என்றுரைக்க தெரிந்திருக்கவேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், எங்கு இயலாது என்று கூறுவது, அதை எப்படிக்கூறுவது என்பதில் தான். அதில் தேர்ந்துவிட்டால், தேவைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துகொள்வது எளிது.

“I am not obligated” என்று விட்டேத்தியாக இருந்துவிடுவது எளிது, ஆனால் இந்த குணத்தால் நண்பர்களை இழக்க நேரிடலாம். இருப்பினும், பொறுப்புகளுக்கும்(responsibilities) வேண்டுகோள்களை ஏற்பதற்கும்(being obligated) வேறுபாடு உண்டு என்பதை உணர்ந்து நடந்தால், திறமையாக நிலைமையை சமாளிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.

மூன்றாவது கண்

March 7th, 2011 No comments
மூன்றாவது கண் என்றாலே அது ஈசனின் நெற்றிக்கண்தான் என்றும், அது உலகை அழிப்பதற்காகவே திறக்கும் என்றும் கூறுவர். ஆனால் மூன்றாவது கண் என்பது, மூன்றாவது கண்ணோட்டத்தை குறிக்கும். நாம் ஒரு செயலை தானாகச் செய்யும்போதும், மற்றவருடன் சேர்ந்து செய்யும்போதும், நமக்கு தன்னிலை, முன்னிலை தோற்றங்களே நினைவில் இருக்கின்றன. தன்னிலையில் மட்டும் செயல்படுவோர், சுயநலவாதிகள் என இச்சமுதாயம் சொல்லும். முன்னிலையில் மட்டும் செயல்படுவோர், நன்மக்கள், தியாகிகள் என்றும் சான்றோர் என்றும் இச்சமுதாய அமைப்பால் போற்றப்படுவர். ஆனால் சுயமுன்னேற்றம் அடைய விரும்புவோர், ஞானனிலை அடைய விரும்புவோர் தன்னிலை, முன்னிலையில் இல்லாமல் படர்க்கையில் பகுத்திறிவார்.

ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம். இரண்டு பேர் தங்களுக்குள் உள்ள மாற்றுகருத்தை தர்க்கம் செய்கிறார் என்று கொள்வோம். அவர்கள், தத்தம் நிலைபாட்டில் இருந்து நகரப்போவதில்லை, அவர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் வரப்போவதுமில்லை. அதையும்தாண்டி ஒரு தீர்வுக்கு என்ன செய்வார்கள்? ஏதாவது ஒரு பொதுவான, நம்பிக்கைக்குறிய ஒருவரின் உதவியை நாடுவார்கள். அவரால் மட்டும் எப்பது ஒரு தீர்வை கொடுக்கமுடிகிறது? அவர், இந்த இருவரின் நிலையிலிருந்தும் விலகி, மூன்றாவது பார்வையில் தீர்வைத்தேடுகிறார்.

நாமே அந்த இருவரில் ஒருவராக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவ்விருவர் என்ன செய்தாரோ அதேதான். ஆனால், ஞானவழியில் செல்வோர், மற்றும் கர்மயோகம் பழகுவோர் வேறுவிதமாகச் செயல்படுவார். அவர்கள், தன்னிலை, முன்னியிலிருந்து விலகி, படர்க்கையில் தீர்வைத்தேடுவர். தன்னிலையிலிந்து விலகி, தன்னை பாதிக்கமல் இருந்தால், எந்தவொரு கேள்விக்கும் பதில் எளிதில் கிட்டும். ஒருவருக்கு முன்றாவது கண் திறந்துவிட்டால், எல்லாமே ஒன்றுதான் எனத் தெளிந்துவிடும். அவர், எதனாலும் பாதிக்கப்படமாட்டார், மனதில் இயல்பு நிலையாம், அமைதியில் (பிரம்மம் என்றும் கூறுவர்) ஆழ்ந்திருப்பர், ஆனந்தித்திருப்பர்.

சரி, அப்போது என் ஈசனின் மூன்றாவது கண் அழிவைதரும் என்றார். இங்கு அழிவு என்பது, “நான்” என்ற எண்ணத்திற்கு. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் “தான்” யார் என்ற விழிப்பு வந்துவிட்டால் என்ன ஆகும். பிறப்பு இருக்காது, எல்லா ஆத்துமாக்களும் அதனுடைய மூலத்தை அடைந்துவிடும், உலகம் உயிரற்றதாகும், அதாவது அழிந்துபோயிருக்கும்.

தொண்டைநாடு நிறைவுற்றது..

February 21st, 2011 No comments

தொண்டை நாட்டின் அனைத்து (31) தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களையும் தரிசனஞ்செய்து பெரும்பேறு பெற்றேன். www.shivatemples.com மற்றும் www.shaivam.org க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர் திருவக்கரை
30. அரசிலிநாதர் திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்

நாய் Vs கல்

January 10th, 2011 No comments
நாயை கண்டாற் கல்லை காணோம், கல்லை கண்டாற் நாயை காணோம்

இது அனைவருக்கும் தெரிந்த பழமொழியே. ஆனால் அதனின் உள்ளர்த்தம் என்ன என்றுரைத்தால், நாய் என்பது நாயகனையோ அல்லது நாயகியையோ குறிப்பதாக கொள்ளளாம். சிலைவடிவில் உள்ள நாயகியாகிய உமையும் லிங்க வடிவிலுள்ள நாயகனாகிய ஈசனும் காண்பவர் கண்களுக்கு கல்லாகவும், நாயகமாகவும் காண்போர் கண்களைபொருத்து தெரியும். ஊண்விழிகளில் கல்லாகவும் உணர்வில் நாயகமாகவும் தெரிதல் திண்ணம்.

நிலுவையிலுள்ள தலைப்புகள்…

December 25th, 2010 No comments

கீழ்காணும் தலைப்பில் சில எண்ணங்களையும், உணர்வுகளையும், பதிவுசெய்ய வேண்டும். ஆனால் எப்போதி என்று அறியேன்.

  1. உணர்வுப்பூர்வமானதில்லாத உச்சாடனத்தினான வாழ்வியல் முறை
  2. உடல் நீத்தார் என்றுரைக்காத உயிர் நீத்தோர்
  3. மங்கையின் மனத்தை கொண்டால்!

Powered by ScribeFire.

கச்சி திருநெறிக்காரைக்காடு

October 21st, 2010 No comments

காஞ்சி மாநகர் சரித்திர காலத்திற்கு முன்பே தோன்றி புராண இதிகாசங்களிலும் சைவ, வைணவ, பெளத்த, சமண காவியங்களிலும் இந்நகர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டு தலங்களுள் காஞ்சிபுரம் முதன்மை வாய்ந்தது. இது உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக மதிக்கத்தக்க மாட்சிமையுடையது. “நகரேஷு காஞ்சி” என்று மகாகவி காளிதாசராலும், “தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சி” என்று மாணிக்கவாசகப் பெருமானும், “கல்வியிற்கரையிலா காஞ்சி நகரம்” என்று திருநாவுக்கரசரும், “காஞ்சியை நினைப்பீர் காசிக்கடிநகர் வசித்த பேறாம்” என காஞ்சிப் புராணமும் போற்றுகின்றது. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இறைவுணர்வு மேலிட பிறக்க, இருக்க, நினைக் தரிசிக்க இறக்க முக்தி அளிக்கின்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சி தலமாகும். பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சி நகரமாகும்.

கா என்றால் பிரமன், அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம். பிரம்ன் சிவனை பூசித்த நகரம் ஆதலால் காஞ்சிபுரம் என் பெயர் பெற்றது. காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் எங்கும் அம்பாள் சன்னதி தனியாக கிடையாது. ஏனெனில் அனைத்து சிவாலயங்களுக்கும் அன்னை காமாட்சி தான் அம்பாளாக விளங்குகிறாள். இந்த சிறப்பு இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 வைணவ தலங்கள் உள்ளது மிகவும் சிறப்பாகும்.

Powered by ScribeFire.

வசவு

April 4th, 2010 No comments

தானுண்டு, தான் மட்டுமே உண்டு என நிலைகொண்டு ஆடும் மனமானது,
தன்னை தாண்டும் நிலைகண்டு தாளாமல் துடித்தெழுப்பும் ஓலமே வசவு;
ஆறக்கூடிய மனம் ஆரவாரமடையும் போது வசவு ஊறும், உருவெடுக்கும்,
ஊற்றெடுத்து உள்ளத்துள்ளே ஊடுருவி நாவின் நுனியின் ஜனிக்கும்,
தாளமில்லா தனித்துதியாகி காலமில்லா நானெனும் இருப்பைத் தூண்டும்,
ஆடிய ஆட்டம் அடங்கியபின் சுவடேதுமில்லாமல் மறைந்துபோகும், மறந்துபோகும்.
….

Powered by ScribeFire.

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

ஒரு கோரிக்கை

October 19th, 2009 No comments

அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,

இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..