Mother
தாயின் பெருமைகளை என் தாய் எனக்குச் சொல்ல, இங்கே அதை தொகுத்துள்ளேன்.
- தாயில் சிறந்த கோவிலும் இல்லை
- தாயின் மடி மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம்
- குழந்தையின் எதிர்காலம் தாயின் கையில்தான் உள்ளது
- எல்லோரது இடத்தையும் தாய் வகிக்க முடியும், ஆனால் தாயின் இடத்தை வகிக்க வேறு எவராலும் முடியாது
- 1 கோடி போதனையை விட ஒருதுளி தாய்மை மேலானது
- மண்ணில் நல்லவனாக வாழவைப்பதும், நானிலத்தில் புகழ் பெற செய்வதும் தாய்தான்
- தாயை எதனோடும் ஒப்பிடுதல் கூடாது. ஏனெனில் அவள் ஈடுஇணை அற்றவள்
- உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை ஒரு தட்டிலும் வைத்து தராசில் நிறுத்தால் உலகின் தட்டுதான் மேலே இருக்கும்
- தாயின் இதயம்தான் குழந்தைகளின் பள்ளிக்கூடம்
- நல்ல தாயை அடைந்தவன் தான் சாதனைகளைப் படைத்து பெரிய மனிதனாக உருவெடுக்கிறான்
- தாயின் உள்ளத்தை அறிந்தவன் கடவுளின் கருணையை அறிந்தவன்
- வாஞ்சையுள்ள இதயதைப் பெற்றவளே தாயாவாள்
- தாயை வணங்குபவனுக்கு தெய்வம் வழிகாட்டும்
- தாய் எங்கிருக்கிறாளோ அந்த இடம் சொர்கம்
- தாயின் கண்ணீரை துடைப்பவனே சிறந்த மகன்
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவாதவன்
- அன்னையின் அன்பிற்கு அளவில்லை
- தாயை பிரிந்த மகன் வெறும் கூடுதான்






