Archive

Posts Tagged ‘lyrics’

சட்டச் சட சட — மந்திரப் புன்னகை அறிவுமதியின் பாடல் வரிகள்

June 30th, 2011 No comments

மந்திரப் புன்னகை என்ற படத்தில் “சட்டச் சட சடவென மழை முளைக்கும்..” என்ற பாடல் மிகச்சிறப்பான பாடல்வரிகளை கொண்டதாக இருக்கிறது. அறிவுமதி, இப்பாடலில் காதல் ரசத்தை பிழிந்து அமுது சமைத்திருக்கிறார். இப்பாடலில் வரும் சில வரிகள் உணர்ச்சிகளை வரிகளில் முழுதாக ஏற்றமுடியும் என்பதற்கு சான்றாக இருக்கிறது. அறிவுமதி தேர்ந்தெடுத்துள்ள வார்த்தகை அனைத்தும் அறுமையிலும் அறுமை. பாடலை கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் தெளித்த உணர்ச்சிப் பூக்களை முழுதாக உள்வாங்கி அனுபவிக்க முடிகிறது. வித்யாசாகரின் இசையில் சந்தி சங்கதி சுத்தியாக பாடல் அமைத்திருக்கிறது.

இந்த மௌனத்தை நான் அடைய,
எத்தனை வார்த்தைகள் கடந்துவந்தேன்…

மௌனத்தில் ஆரம்பித்து மௌனத்தில் முடித்தல் சிறப்பன்று. சத்தத்திற்கு பின் தான் மௌனம் என்பதை அழகாக சொல்கிறார்.

ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே

காதலன் காதலி உரசலில் தேகங்கள் தேய்ந்தாலும் தேடுதல் குறைவதில்லை என்பதை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்!

ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திறுகிட தகதிமிதா..

இதைவிட நெருக்கத்தில் இருக்கும் காதலர்களின் உணர்ச்சியை அழகுபடுத்தி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!

இதழிலே வெயில் மழை
உரியுதே உயிர் கிளை
இடையிலே புதுச் சுமை..

“இடையிலே புதுச் சுமை”, அட அருமை அருமை அருமை!

காதல்

March 6th, 2010 No comments

கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.

இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே.. (2)

தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
அன்றே ??
தீண்டாமல் தீண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
வேண்டாமல் வேண்டி கொடுத்தது,
இன்றே ??

உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

எண்ணங்களின் எல்லையிலே இருந்தேன்,
எல்லைதாண்டும் உந்தன் உணர்வறிந்தேன்,
எனைத்தேடும் உந்தன்பார்வை ஆட் கொள்ளுதே..
என்னையீர்க்கும் உன்னுடைய அன்பு என்னைமீறி செல்லும்,
அது என்னை உன்னடி சேர்க்கும்,
இதுசுகமென வேண்டி என்னைத்தந்து களித்தேனே..

சிறகெனும் சிற்றாடை சுகமிது;
பிறவியின் பற்றான துதியிது;
உறவினில் உன்னோடு உறைந்திட ஏங்கி தரித்தேனே.. (2)

பாவை நான்-உன்னகம் விழுந்தேன்,
பார்வை-அதை உன்னிடம் தொலைத்தேன்,
பூவை-நான் எனமனம் துறந்தேன்,
இன்றே! .. (2)

Powered by ScribeFire.