Archive

Posts Tagged ‘love’

காதல்

March 6th, 2010 No comments

கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.

இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே..

தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
எங்கே ??
நோகாமல் நொந்து விழுந்தது;
தீண்டாமல் திண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
எங்கே ??

உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

Powered by ScribeFire.

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

காதலிங்கள்

July 9th, 2009 No comments

காதல், தன்னுள் இருக்கும் ஆணவத்தை அறிய ஒரு அற்புதமான கருவி.  அதுவும், காதலிக்கப் படவேண்டும் என்ற எண்ணம், ஆணவத்தின் உச்சக்கட்டம். காதலில், அன்பும், காமமும் அடக்கம், நான் என்ற எண்ணமும் அடக்கம். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் ஆணவத்தின் ஆட்சியை அறிந்தவர்கள்.  ஏனெனில், என்னை விலக்கிவிட்டார்களே என்ற எண்ணம், அவ்வளவு வலித்திருக்கும்.  இந்த வலி, ஆணவத்திற்கு கிடைத்த வெற்றி; ஆனால் தன்னை அறியும் முயற்சிக்கும் அது வெற்றியே.  ஆணவத்தை கூர்ந்து கவனிக்க, ஆணவம் கரையும், குரோதம் விலகும், அமைதி பிறக்கும், ஆனந்தம் நிறையும்.

Powered by ScribeFire.

Tags: , ,