திருவிற்கோலம் (தற்போது கூவம்) கிராமத்திலுள்ள திரிபுராந்தக சுவாமி அல்லது தீண்டாத் திருமேனி நாதர் பெருமானை காண நேற்று எனது thunderbirdல் சென்றேன். http://www.shivatemples.com/tnaadut/tnt14.html

இந்த ஆலயத்தில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த ஆலயம், கூவம் நதியில் மூலத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் குளம் அக்னி தீர்த்தமாகும்; இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த குளத்தில் ஒரு தவளை கூட கிடையாது. ஆலயத்தில் மூலவரான சிவலிங்கம் தீண்டப்படாதது; ஏனெனில் இது நிறம் மாறக்கூடியது. வெள்ளை நிறமாக மாறும் போது மழைவருமாம், மற்றும் நினைத்த காரியம் நிறைவேறுமாம். இவ்வாலயம் தெற்கு பார்த்த கோபுரத்தை கொண்டது. ராஜ கோபுரம் தற்போது கட்டப்பட்டது தான். ஆலயத்தை நிர்வகிப்பது திரு ராஜேந்தின் (9381846515).
இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).
இந்த விளம்பரத்தை தருமபுரியில் DNC திரையரங்கம் வாசலில் பார்த்தேன், மகிழ்ந்தேன். அரவாணிகள் சிவனுக்கு சமமானவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.
Powered by ScribeFire.

இந்த விளம்பரம், நான் என்னுடைய Yahoo! Mailன் பக்கவாட்டில் காண்பிக்கப்பட்டது. இதில் இரண்டு தவறுகள் உள்ளன.
- ஒன்று, திருமணமான பயனாளரான எனக்கு, இந்த விளம்பரம் ஏற்றதல்ல.
- இரண்டு, இந்த விளம்பரத்தில் துளிகூட உண்மையில்லை.
இதில் காண்பிக்கப்படுகின்ற பெண்கள், பொதுவாக மாடல்கள் (Professional Models).
இவர்கள், உண்மையாகவே திருமணத்திற்கு தயாரான, இணைய தளத்தில் பதிந்த பயனர்களில்லை.
இதை எப்படி சொல்லுகிறேனென்றால்,
- அதே படமானது பல மாதங்களாக வருகின்றது.
- அழகான இவர்கள், இத்தனை மாதங்களாக சரியான துணை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றால், நம்பக்கூடியாத இல்லை.
இதில் இன்னுமொரு தவறு இருக்கிறது. இந்த பெண்களின் தொழில், மற்றும் வயதை பாருங்கள்.
- 21 வயதில் வங்கி மேலாளர் ஆவதற்கு சொந்தமாக வங்கி/கந்து வட்டிக்கடை தொடங்கினால் கூட முடியுமா என்று தெரியவில்லை.
- 22 வயதில் மனிதவள மேலாளர் ஆவதற்கு வாய்ப்பு சொந்தமாக (அப்பன் மூலமாக) தொழில் தொடங்கினால் மட்டுமே முடியும்.
கேக்கிறவன் கேனையா இருந்தா, “எறும மாடு ஏறோப்லேன் ஓட்டுச்சாம்”..
இப்படித்தான், நம்ப பசங்களை Naukri/Jeevansathi போல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறார்கள்.
Powered by ScribeFire.

நம்முடைய அரசு பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனாலும், புகை பிடிப்பது குறைந்ததாக தெரியவில்லை. மக்கள், எப்போது போல தான் பொது இடங்களில் புகைபிடிக்கின்றனர். எனெனில், இதை தடுக்கவேண்டியவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெருபாலானோர் இந்த பழக்கத்திற்கு வீழ்ந்தவர்கள்.
இருக்கட்டும், இந்த படத்தை பாருங்கள். சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்க பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சாக்குகள்.
இந்த துண்டு பிரசுரம், கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், திருவிழியம்மன் கோயிலின் அருகாமையிலுள்ள பெட்டிக்கடையில் ஒட்டப்பட்டு இருந்தது.
Powered by ScribeFire.

The real Certificate URL is here. If you want a certificate for yourself and have plenty of free-time, visit Lost In 5 Star Chocolate.
Powered by ScribeFire.