நீங்கள் பார்ப்பது டெய்டல்ஸ் சாலையில் சில காலம் முன்னர் இருந்த ஒரு பான் கடை. இந்த கடை இப்போது அங்கு இல்லை, ஏதொ ஒரு உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. திரு குட்டு (Goodu) தான், இந்த கடையில் முதலாளி. அவர் ஆர்டரின் பேரில் சப்ளை செய்வதாக விளம்பரப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆங்கில உச்சரிப்பை அப்படியே ஆங்கிலத்தின் எழுத முயன்றுள்ளார். அவருடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஆனால் ஆங்கிலம் தான் மிக வருந்தத்தக்க முறையில் உள்ளது. ம்ம்ம்.. அது ஆங்கிலேயரின் பிரச்சனை, நமக்கென்ன?
அவர் சொல்ல வந்தது என்னவென்றால்:-
PAN Shop
Order and Party Supply
Mr Goodu
Phone: 9977192747..
திருத்தம் (19/07/2010): குட்டுவின் கடை திரும்பி திறக்கப்பட்டுவிட்டது!
Powered by ScribeFire.

காது குடைவதின் ஆனந்தம் இணையற்றது. சிந்தித்து பார்த்தால், சின்னஞ்சிறு வயதிலிருந்தே காதை குடைந்தெடுத்திருக்கிறேன். எண்ணிப் பார்த்தால் பலதரபட்ட உபகரணங்களை உபயோகித்திருப்பது தெரியவருகிறது. அதில் சில இதோ:-
- துடைப்பங்குச்சி
- பாய் குச்சி
- ஊக்கு
- கொண்டைஊசி
- சுண்டுவிரல்
- துணியின் நுணி
- பென்சில்
- பென்
- பல் துலக்கும் பிரஷின் பின்பகுதி
- மூக்கு கண்ணாடியின் சட்டம்
- திருப்புளி (ஆபத்தானது)
- சாவி
- வயரின் உரை (sleeve)
- உருட்டிய காகிதம் (மிக பிரபலம்)
- Buds (எனக்கு பிடிக்காது!)
- காக்கை/கோழி இறகு
- பலப்பம் குச்சி
- …

இந்த சுவரொட்டி தருமபுரி DNC திரையரங்க மதில்சுவற்றின் மேல் காணப்பட்டது.
என் துணைவி எடுத்த படம்.
மிக திறமையாக எடுக்கப்பட்டப் படம்.
என்னுடைய சுருட்டை சிகையை மட்டும் தெளிவாக காட்டியுள்ளார்!
Powered by ScribeFire.
திருவிற்கோலம் (தற்போது கூவம்) கிராமத்திலுள்ள திரிபுராந்தக சுவாமி அல்லது தீண்டாத் திருமேனி நாதர் பெருமானை காண நேற்று எனது thunderbirdல் சென்றேன். http://www.shivatemples.com/tnaadut/tnt14.html

இந்த ஆலயத்தில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த ஆலயம், கூவம் நதியில் மூலத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் குளம் அக்னி தீர்த்தமாகும்; இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த குளத்தில் ஒரு தவளை கூட கிடையாது. ஆலயத்தில் மூலவரான சிவலிங்கம் தீண்டப்படாதது; ஏனெனில் இது நிறம் மாறக்கூடியது. வெள்ளை நிறமாக மாறும் போது மழைவருமாம், மற்றும் நினைத்த காரியம் நிறைவேறுமாம். இவ்வாலயம் தெற்கு பார்த்த கோபுரத்தை கொண்டது. ராஜ கோபுரம் தற்போது கட்டப்பட்டது தான். ஆலயத்தை நிர்வகிப்பது திரு ராஜேந்தின் (9381846515).
இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).