Archive

Archive for the ‘poems’ Category

வர்ணனை

October 28th, 2009 No comments

நிறம் பல கொண்டாய்,
புறம் இழைய பொதிந்தாய்,
நிலம் பார்த் தசைந்தாய்,
புலம் போற்றி யீர்த்தாய்.

திரை சீலை கொண்டாய்,
பட்டுடுத்தி நின்றாய்,
திரை விலகி திமிர,
பட்டாக படர்ந்தாய்.

உள்ளங் கையில் தவழ்ந்தாய்,
உள்ளவன் கையில் தவித்தாய்,
உள்ளந் நெகிழ தளர்ந்தாய்,
உள்ளவன் மகிழ மலர்ந்தாய்.

உச்சம் முரச நிமிர்ந்தாய்,
மிச்சம் முதலாய் சிலிர்த்தாய்,
முத்து உருண்டோட மிளிர்ந்தாய்,
சித்து சுதியேர மசிந்தாய்.

உருவம் ஒன்றன்றி இருப்பாய்,
இலவம் பஞ்சினும் சிறப்பாய்,
உலகும் வியந்தபடி பிறப்பாய்,
இலகும் மதுரமேனி விருப்பாய்.

Powered by ScribeFire.

Tags: , ,

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

ஒரு கோரிக்கை

October 19th, 2009 No comments

அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,

இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..

கால்கள் மரத்து போனால்..

September 25th, 2009 No comments

கால்கள் மரத்துப் போனால்,
எச்சில் தொட்டு கால் கட்டை விரலில் தடவ,
கால்கள் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பும்.

Tags: , ,

தும்மல்

September 25th, 2009 No comments

தும்மல் விலக்க,
நாசி துவாரத்தின் மத்தியில்,
நாசியின் நடுதண்டின் அடியில்,
ஆள்காட்டி விரலால் அழுத்த,
தும்மல் அடங்கும்.

Tags: , ,

ஆடவர்..

September 25th, 2009 No comments

ரோமம் நிறைந்தவன் உணர்ச்சிவயப்படுவான்,
ரோமம் அற்றவன் அதீத சுயநலவாதியாவான்,
வலது தோளில் மச்சமுள்ளவன் அதிட்டசாலி,
இடது தோளில் மச்சமுள்ளவன் போராளி,
லிங்கத்தில் மச்சமுள்ளவன் போகி,
கர்மத்தின் இச்சையுள்ளவன் யோகி,
பின்னலுள்ள உள்ளங்கையுடையான் குழப்பமடைவான்,
பின்னலில் உள்ளம் தொலைத்தவன் இன்னலடைவான்,
இல்வாழ்வு துறந்து ஞானத்தேடல் கடிது,
இல்வாழ்வு இருந்து ஞானத்தேடல் எளிது,
மனையாள் மனைவியாயிருத்தல் லவ்கீகம்,
மனையாள் துணைவியாயிருத்தல் ஆன்மீகம்,
தந்தையின் கர்மம் தமையனைச் சேரும்,
தமையன் முக்தம் வரை தந்தைக்கு முற்று அன்று,
சந்தானபேறு ஒரு கடமையே ஆகும்.

Tags: , ,

ஈர்ப்பு

September 22nd, 2009 No comments

ஈர்ப்பே ஈசனின் ஈசத்வமாகும்,
ஈர்ப்பே வினையின் முதலாகும்,
ஈர்ப்பே ஓட்டத்தின் கர்த்தாவாகும்,
ஈர்ப்பே சுழற்சியின் வித்தாகும்,
ஈர்ப்பே பிறப்பின் மூலமாகும்,
ஈர்ப்பே ஓங்காரத்தின் பலனாகும்,
ஈர்ப்பே உறவுவின் உரமாகும்,
ஈர்ப்பே உயர்வின் ஏணியாகும்,
ஈர்ப்பே வழிபாட்டின் எதிர்பயனாகும்,

….

அழகு

September 20th, 2009 No comments

அழகு ஒரு உணர்வே அன்றி பொருள்ளல்ல,
அழகு காலத்தின் அடிமையே அன்றி வேறல்ல,
அழகு கண்ணோட்டத்தில் மட்டுமே நில்லே,
அழகு கண்கெட்டோர்க்கு வெறும் சொல்லே,
அழகு செழுமையிலும் உண்டு,
அழகு வெறுமையிலும் உண்டு,
அழகு காரணியான உறவு நிலைக்காது,
அழகு பூரணியான தாய்மை பொய்க்காது,
அழகு ஆடவரின் ஆற்றலை அளக்கும்,
அழகு பெண்டிரின் பொருமையை அளக்கும்,
அழகு அருணையின் ஒளிகீற்று,
அழகு பொருணையின் நீறூற்று,
அழகு அகத்தின்பால் இருக்க ஈர்க்கும்,
அழகு புறத்தின்பால் இருக்க நீர்க்கும்,
அழகு ஈர்ப்பின் மற்றொரு முகவரி,
அழகு எல்லா வினையின் மூலவரி,
அழகு (வடிவத்தின்) ஆசை இரட்டைகிளவி,
அழகு (வடிவத்தின்) ஆணவம் இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அன்பு இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அருள் இரட்டைகிளவி,
அழகு புகழ் போதை தரக்கூடியன,
அழகு பற்று துயரை தரக்கூடியன,
அழகு துணிவு வெற்றியை தரக்கூடியன,
அழகு ஆற்றல் உயர்வை தரக்கூடியன்.

அகத்தின் அழகை நல்ல எண்ணங்களைக் கொண்டு மெருகேற்றுவீர்.
புறத்தின் அழகை நல்ல செயல்களை செய்து மேம்படுத்துவீர்.
அழகினால் தோன்றும் போதையை வெற்றி கொள்வீர்,
அழகைக்கொண்டு துணிவும் மற்றும் ஆற்றலில் உதவியோடு வாழ்வில் உயர்வீர்.

Powered by ScribeFire.

நட்பு

August 20th, 2009 No comments

தனிமையே திவ்ய தவமென
திறிந்து கொண்டிருந்தேன் நேற்று
இனிமையே நாம் கொண்ட நட்பென
Instantட்டாய் புரியவைத்தாய் இன்று

நாளை என்ற கேள்வியே நமக்கு
Nonsensical தனமாக இருக்கு
இப்போது என் செய்வோம் எனக்கண்டு
வெல்ல வேண்டும் திறம்பட புரிதல் கொண்டு

பலமாக பாலமாக இருப்பது நம் நட்பு
நண்பர்கள் அன்றி இருத்தல் மிக தப்பு

எனக்கு நண்பனாக நீயும்
உனக்கு தோழனாக நானும்
சேர்ந்தே சாதிப்போம் ஒன்றுபட்டு
நம் நட்புக்கு இருக்குமொரு கல்வெட்டு.

மரணம் ஆனந்தம்

July 15th, 2009 No comments

மரணம் ஆனந்தம்;
மரணம் ஸ்தூல உடலுக்குத்தான்,
மரணம் ஆன்மாவிற்கில்லை;
நான் ஆன்மா;
நான் அருவம்;
நானே எங்கும் நிறைந்திருக்கிறேன்;
நானே எல்லாவும்;
எல்லாவும் நானே!