காதல்
கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.
இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே.. (2)
தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
அன்றே ??
தீண்டாமல் தீண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
வேண்டாமல் வேண்டி கொடுத்தது,
இன்றே ??
உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..
எண்ணங்களின் எல்லையிலே இருந்தேன்,
எல்லைதாண்டும் உந்தன் உணர்வறிந்தேன்,
எனைத்தேடும் உந்தன்பார்வை ஆட் கொள்ளுதே..
என்னையீர்க்கும் உன்னுடைய அன்பு என்னைமீறி செல்லும்,
அது என்னை உன்னடி சேர்க்கும்,
இதுசுகமென வேண்டி என்னைத்தந்து களித்தேனே..
சிறகெனும் சிற்றாடை சுகமிது;
பிறவியின் பற்றான துதியிது;
உறவினில் உன்னோடு உறைந்திட ஏங்கி தரித்தேனே.. (2)
பாவை நான்-உன்னகம் விழுந்தேன்,
பார்வை-அதை உன்னிடம் தொலைத்தேன்,
பூவை-நான் எனமனம் துறந்தேன்,
இன்றே! .. (2)

Powered by ScribeFire.