காதல்
கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.
இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே..
தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
எங்கே ??
நோகாமல் நொந்து விழுந்தது;
தீண்டாமல் திண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
எங்கே ??
உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

Powered by ScribeFire.