Home > Philosophy, Temples > வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கணில் முட்டம்

வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கணில் முட்டம்

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 9 கிமி தொலைவில் இருக்கும் தூசி கிராமத்தில் பிரிந்து சுமார் 2 கிமி கடந்து செல்ல திருகுரங்கணில் முட்டம் கிராமம் வருகிறது.  இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது.  இங்கு குரங்காக மாறிய வாலிக்கும், அணிலாக மாறிய இந்திரனுக்கும், காகமாக மாறிய எமனுக்கும் ஈசன் சாபவிமோசம் அளித்துள்ளார் என்பது ஐதீகம்.  கோயிலின் வாயிலில் குரங்கு, அணில், காகம் இறைவனை பூசிப்பதை காணலாம்.  http://www.shivatemples.com/tnaadut/tnt06.html

காஞ்சிபுரத்திலிருந்து Collector அலுவலகம் வழியே செல்லவேண்டும்.  வந்தவாசி சாலை குறுகியது.  சுமார் 4 கிமி சென்ற பிறகு பாலாற்றின் மீதமைந்துள்ள பாலத்தை கடக்கவேண்டும்.  சிறிது தூரம் சென்றபின் ஐயன்குளம் கூட்டுசாலை வரும்.  அதைகடந்து செல்ல தூசி கிராமம் வரும்.  ஆங்கு இடதுபுரம் திரும்பி சுமார் 1 கிமி செல்ல தூசி கிராமம் எல்லை வரும்.  அதிலிருந்து சுமார் 1.5 கிமி கடக்க குரங்கணில் முட்டம் வரும்.

ஆலயத்தின் குருக்கள்,  திரு KM Sridhar (9600787419, 9629050143, 044-27242409) மிக அருகே இருக்கிறார்.