எண்ணங்கள்
எண்ணங்கள் இல்லாமல் இருக்கத்தான் முடியுமா?
எண்ணங்களை அடக்கத்தான் வேண்டுமா?
அடக்கவும், அடங்கி ஒடுங்கவும் எண்ணங்கள் புரவியா என்ன?
அடக்கிவிட்டால், சில காலம் கழிந்து பொங்கிவிடாதா என்ன?
எண்ணங்களை என்ன தான் செய்வது?
எண்ணங்களின் ஆதியை காண முடியுமா?
எண்ணங்களின் ஆதியை கவனிக்க ஓட்டம் குறையுமோ?
எண்ணங்களை எண்ணுவது யாராக இருக்கமுடியும்?
எண்ணங்களின் எதை அச்சாணியாக கொண்டுள்ளது?
அவ்வச்சாணியை அசைத்து பார்க்க முடியுமா?
ஓம் என்ற பிரணவத்துக்கும் அவ்வச்சாணிக்கும் தொடர்பேதுமிருக்குமோ?
நான் என்ற உணர்வும் ஓம் என்ற பிரணவமும் ஒன்றோ?
நான் என்ற உணர்வு அடங்க எண்ணங்கள் மறையுமோ?
எண்ணங்கள் மறைய ஆனந்தம் பொங்கிவிடாதோ?
ஆனந்த நிலையில் ஊண் எதற்கு?
ஆன்ம உணர்வில் நிலைத்து நிற்க,
ஆனந்த பரவசம் பொங்கிட,
கவனத்தை உள்முகம் திருப்புவீர்,
உள்ளுக்குள் கடந்து செல்வீர்,
கடவுளாவீர்!
Powered by ScribeFire.