Archive

Archive for October, 2008

கேட்கக்கூடாத ஒரே கேள்வி ?

October 2nd, 2008 No comments

கேட்கக்கூடாத ஒரே கேள்வி வேறேதுமில்லை; அது எதிர்காலத்தை அறிய விழைவது தான்.
வரும்காலம் பற்றி அறிவது ஒரு வரமாக இருக்க முடியுமா? அது ஒரு சாபமே ஆகும்!
வாழ்க்கை வாழ்கையில், இன்று மட்டுமே நிச்சயம். எதிர்காலம் ஒரு கனவே. கனவு, கனவாக இருப்பதால் தானே சுகம். கனவெல்லாம் நிசமானால், கனவு மனதை கலவரப்படுத்தும். நாளை என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்தவர், தன்னிலை மறந்து அமைதியிழக்கிறார்.

நாளை நடப்பது நாளை பார்த்துக்கொள்வோம். இன்றைய நாளை இனிதே கழிப்போம்.

Tags: